கே.ஜி மருத்துவமனையில் சிறுதுளை சிகிச்சையில் நலமாகும் இருதயம்

முன்பிருந்த காலத்தை ஒப்பிட்டு பார்க்கையில் தற்போது நமது வாழ்க்கை முறை மாற்றத்தால், நோய்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. அதேசமயம் அறிவியலின் வளர்ச்சியால் அதற்கான தீர்வுகளும் ஒருபுறம் நமக்கு கிட்டி வருகின்றன. இந்திய அளவில் இருதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இளம் வயதுடையோர்களிடையே கூட மாரடைப்பு ஏற்படுகிறது.

ஆனால் சிகிச்சை முறையில் ஏற்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப முன்னேற்றத்தால் வலி இல்லாமல் மார்பு பகுதியில் சிறு துளையிடும் (சிறுதுளை) அறுவை சிகிச்சை கே.ஜி மருத்துவமனையில் மேற்கொள்ளப்படுகிறது. கோவையில் முதல்முறையாக இந்த சிகிச்சை இங்கு தான் அறிமுகம் செய்யப்பட்டது. இப்படி ஒரு வரவேற்பு பெற்ற சிகிச்சை குறித்தும், அதன் பயன்கள் பற்றியும் மருத்துவமனையின் அனுபவம் மிக்க இருதயவியல் மருத்துவர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்:

மனிதன் தன் அன்றாட வேலைகளை சுறுசுறுப்பாக செய்ய இருதயம் நன்றாக இயங்குவது அவசியம். இருதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அதனை பாதுகாப்பாக வைத்திருப்பது முக்கியம். ஆரம்பத்தில் இருதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளாமல் பிரச்சினை ஏற்பட்டபின் மருத்துவமனைகளில் அவதிப்படுவதை காணமுடிகிறது.

உடற்பயிற்சியின்மை, புகை பழக்கம், கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்ணுதல், உடற்பருமன் ஆகியவற்றை கொண்டிருந்தால் மாரடைப்பு ஏற்படும். ஆண்கள், பெண்கள் என இரு பாலினரையும் இது பாதிக்கும். இந்தியாவில் ஆண்டிற்கு 1 கோடி பேரும், தமிழகத்தில் சுமார் 10 லட்சம் பேரும் மாரடைப்பினால் பாதிக்கப்படுகின்றனர்.

நெஞ்சு, தாடை மற்றும் கைகளில் வலி, அதிகப்படியான வியர்வை வந்தால் அது மாரடைப்பிற்க்கான அறிகுறி. நெஞ்சு வலி ஏற்படும் சமயத்தில் அனைத்து பரிசோதனை வசதிகளும் உள்ள உரிய இடத்தில் சிகிச்சை பெறுவது அவசியமான ஒன்று.

கே.ஜி மருத்துவமனையின் இருதய துறையில் அனுபவம் மிக்க பல மருத்துவர்கள் பணிபுரிகின்றனர். கோவையில் கே.ஜி மருத்துவமனை 48 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகளை தன்னிடம் கொண்டுள்ள இம்மருத்துவமனை கோவையின் இருதய துடிப்பாக உள்ளது.

ரத்தக் குழாய் அடைப்பு ஏற்பட காரணம்:

பரம்பரையாக மரபணு குறைபாடு அல்லது தந்தைக்கு கொழுப்புசத்து அதிகமாக இருந்து அது குழந்தைக்கும் வரும் பட்சத்தில் அடைப்பு ஏற்படலாம். மற்ற நாட்டினரை ஒப்பிடும் போது, இந்தியாவிலுள்ள ஆண்களுக்கு இருதயத்தில் அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும் வயதாகும் போது இருதயத்தில் ரத்தக் குழாய் அடைப்பு ஏற்பட சாத்தியக்கூறுகள் உள்ளன.

புகை பிடிக்கும் பழக்கம், உடற்பருமன், உடல் உழைப்பு குறைவாக இருப்பவர்கள், சர்க்கரை நோய், கொழுப்பு சத்து, உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம் உள்ளவர்களுக்கு இருதய நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கும் வயதாகும்போது ஹார்மோனல் சமநிலை குறைவதனால் இருதய பாதிப்பு ஏற்படும்.
திடீரென நெஞ்சு பகுதி, தாடை, தோள்பட்டையில் வலி ஆகியவை மாரடைப்பின் அறிகுறி. இதனை அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியமான ஒன்று.

சிறுதுளை அறுவைசிகிச்சை :

இருதயத்தில் கொழுப்பு, தொற்று, வீக்கம் ஆகிய காரணங்களினால் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வரலாம். இந்த ரத்தக் குழாய்களில் ஒன்று அல்லது இரண்டு அடைப்புகள் ஏற்பட்டு இருப்பின் ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டு ஸ்டென்ட் பொருத்தப்படும். சிலருக்கு ஸ்டென்ட் வைப்பதில் சிக்கல் இருக்கும், அவர்களுக்கு திறந்த நிலை பைபாஸ் அறுவை சிகிச்சை முறையில், அதாவது, நெஞ்சுப் பகுதி எலும்புகளை துண்டித்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். இதில் புது ரத்தக் குழாய்களை இணைத்து இருதயத்திற்கு ரத்த ஓட்டம் மீண்டும் அளிக்கப்படும்.

இதற்கு அடுத்தபடியாக, திறந்த நிலை பைபாஸ் அறுவை சிகிச்சையிலேயே இருதயத்தை நிறுத்தாமல் துடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில் நோயாளியின் மீளும் தன்மை அதிகமாக இருக்கும்.

ஆனால் இதுபோன்று நெஞ்சுப்பகுதி எலும்பை துண்டித்து அறுவை சிகிச்சை செய்தால் சில மாதங்கள் வேலை செய்ய முடியாது, தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது உள்ளிட்ட காரணங்களினால் திறந்த இருதய அறுவை சிகிச்சை செய்து கொள்வதில் மக்களிடம் பயம் நிலவியது.

அதேசமயம் அதிக எண்ணிக்கையிலான அடைப்புகள் இருந்து, அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற நிலையில், அதுகுறித்து பயம் கொள்பவர்களுக்கு நவீன முறையில் கே.ஜி.மருத்துவமனையில் சிறுதுளை இருதய அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இருதயத்தில் இருக்கும் ரத்தக் குழாய்களில் எங்கு அடைப்பு ஏற்பட்டாலும் இந்த முறையினை பயன்படுத்தி கே.ஜி.,யில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வலதுபுற மார்புக்கு கீழ் உள்ள விலா எலும்புகளுக்கு இடையில் ஒரு சிறுதுளை இடப்பட்டு நவீன கருவிகளை கொண்டு இருதய துடிப்பை நிறுத்தாமலேயே சிறுதுளை சிகிச்சை செய்யப்படுகிறது. கே.ஜி மருத்துவமனையில் வெற்றிகரமாக இதுவரை 300 க்கும் அதிகமானோருக்கு இந்த சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர்.

சிறுதுளை சிகிச்சையின் பயன்கள் :

சிறுதுளை சிகிச்சைக்கு பின்னர் வலி இருக்காது. தழும்பு பெரிய அளவில் இருக்காது. தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு, ரத்த இழப்பு, மிகவும் குறைவு. தங்களது இயல்பு வாழ்க்கைக்கு விரைவிலேயே திரும்பி 2 வாரங்களிலேயே அனைத்து வேலைகளையும் செய்யலாம்.

வயதானவர்கள், புகை பழக்கம் கொண்டவர்களுக்கு திறந்த நிலை இருதய அறுவை சிகிச்சை செய்வது சற்று சிக்கலானது. ஆனால் சிறுதுளை முறையில் சிக்கல் ஏற்படாது. இந்த முறையில் குழந்தைகளுக்கு பிறவிலேயே ஏற்படும் இருதய குறைபாடுகளை சரி செய்ய முடியும். சிறுதுளை அறுவை சிகிச்சை மூலம் பைபாஸ் அறுவை சிகிச்சை, வால்வு மாற்று அறுவை சிகிச்சை அல்லது வால்வை பழுது பார்ப்பது ஆகியவற்றையும் சரி செய்யலாம். இந்த சிகிச்சைக்கு வயது வரம்பு இல்லை.

தவறாமல் இதை பின்பற்றுங்கள் :

இருதய அறுவை சிகிச்சைக்கு பின்பு மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்வதுடன், குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரிடம் செல்வது முக்கியம். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கொழுப்பு ஆகியவற்றை பரிசோதனை செய்து கட்டுக்குள் வைக்க வேண்டும்.

அறுவை சிகிச்சைக்கு பிறகு நிச்சயம் வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். குறைந்தது 3 அல்லது 4 கிலோமீட்டர் தினசரி நடைபயணம் மேற்கொள்ளவேண்டும். காய்கறிகளை அதிக அளவில் சேர்த்துக் கொண்டு அசைவ உணவு, எண்ணெய் பதார்த்தம், இனிப்புகளை தவிர்ப்பது நல்லது.

வெளி உணவை தவிர்த்து, வீட்டு உணவையே எடுத்துக் கொள்ள வேண்டும். மன அழுத்தம், கோபம், சண்டையிடுவதை தவிர்த்து, தியானம், யோகா செய்வது நன்மை தரும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளும் முறைகளை கையாளுவது முக்கியமானது.

மேலும், தூக்கமின்மைக்கு முக்கிய காரணமான மன உளைச்சலை தவிர்த்து விட்டாலே உறக்கம் வரும். தூங்க செல்லும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு தொலைபேசி, டிவி ஆகியவற்றை பார்க்காமல், நீண்ட நேரம் விழித்து இருக்காமல் சீக்கிரம் தூங்க வேண்டும். நல்ல தூக்கம் இருந்தால் ஆயுள் நீண்டு இருக்கும் என்பது ஆய்வுகளின் மூலம் நிரூபணமாகியுள்ளது.