கோவை மாநகரில் சமீபகாலமாக அமைதியை குலைக்கும் ஒருவித பதட்ட சூழ்நிலை நிலவுகிறது. மேலும் வருகின்ற காலம் பண்டிகை காலம் என்பதால் பல ஊர்களில் இருந்து மக்கள் தொழில் நகரமான கோவையை நோக்கி வருவார்கள். அப்பொழுதும் இதே பதட்டநிலை நீடித்தால் வியாபாரிகள், தொழிலாளிகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்புக்குள்ளாவார்கள்.
எனவே அரசு மற்றும் காவல்துறை, நகரின் அமைதியை நிலை நாட்டும் வண்ணம் அமைதிக்கு அச்சுறுத்தும் எந்த தரப்பாயினும் பாரபட்சமின்றி இரும்புகரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மனு அளித்தனர்.