Microsoft நிறுவன தலைவர் குழப்பம்!

கொரோனா சமயத்தில் பல நிறுவனங்கள் அதன் ஊழியர்களை Work From Home என்ற முறையில் வேலை வழங்கிவருகின்றன. பல நிறுவனங்கள் மீண்டும் அலுவலகத்திற்கு திரும்புமாறு கேட்டுக்கொண்டாலும் ஊழியர்கள் மீண்டும் வருவதற்கு தயங்குகிறார்கள்.

இதில் மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் சத்யா நாடெல்லா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மேனேஜர்கள் பல ஊழியர்கள் மிகவும் சோம்பேறித்தனமாக இருப்பதாக புகார் தெரிவித்துருக்கிறார்.

அதில் அவர் கூறியதாவது   80% ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும்போது அதிக அளவு வேலை செய்யமுடிவதாக தெரிவிக்கின்றனர். அதேபோல 80% மேனேஜர்கள் ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும்போது   சோம்பேறித்தனமாகவும் குறைந்த அளவு வேலை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் ஊழியர்களில் 50% பேர் வீட்டில் இருந்து வேலை செய்வதாகவும் மீதம் உள்ள 50% பேர் அலுவலகம் வந்து வேலை செய்வதாகவும் தெரிவித்துள்ளது.

இதேபோல Google, Apple மற்றும் பல முன்னணி நிறுவனங்கள் அதன் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைப்பதாகவும். ஊழியர்கள் கொரோனா காலகட்டத்தில் வீட்டில் இருந்தே பணி செய்து பழகிவிட்டதால் மீண்டும் அலுவலகம் வர தயங்குகிறார்கள்.

மேலும் குடும்பத்தில் அவர்கள் நேரம் செலவிடுவதை அதிகம் விரும்புகிறார்கள் அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு அதிக செலவு ஏற்படுகிறது. இதனால் பல நிறுவனங்கள் அதன் ஊழியர்களை மீண்டும் வேலைக்கு அழைப்பதற்கு பல முயற்சிகள் எடுக்கவேண்டியுள்ளது.