முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் மீண்டும் ரெய்டு

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் மூன்றாவது முறையாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் வடவள்ளி பகுதியிலுள்ள மாநகராட்சி ஒப்பந்ததாரரும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவருமான சந்திரசேகர் வீட்டிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்

எற்கனவே இரண்டு முறை லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியும் ஆவணங்கள் கைப்பற்றப்படாத நிலையில், மூன்றாவது முறையாக இந்த சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.