ஆர்.வி.எஸ் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு துவக்க விழா

ஆர்.வி.எஸ் மேலாண்மையியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க விழா மற்றும் மேலாண்மை சங்கம் தொடக்க விழா திங்கள் கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கல்லூரியின் ஆலோசகர் பத்ரி வாழ்த்துரை வழங்கியும், மேலாண்மை துறை இயக்குனர் பிரபா வரவேற்புரையும், வேலைவாய்ப்புத் துறை தலைவர் வேலமுதன் சிறப்புரையும் வழங்கினர்.

நிகழ்வின் இறுதியாக மேலாண்மைத்துறை தலைவர் நிருபாராணி நன்றியுரை வழங்கினார்.

மேலாண்மைத்துறையின் பேராசிரியர்கள் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களும் ஒருங்கிணைந்து முதலாம் ஆண்டு மாணவர்களையும், பெற்றோர்களையும் வரவேற்றனர்.