பழத்தோல்களில் இருந்து ஹேண்ட்பேக்ஸ்!

பழங்களின் தோல்களை கொண்டு ஹேன்ட் பேக்குகளை உருவாக்கியுள்ளார் நடிகர் திரைப்பட அர்ஜுனின் இரண்டாவது மகளான அஞ்சனா அர்ஜுன்.

 

புது நிறுவனம் தொடங்கிய நடிகர் அர்ஜூனின் மகள். இந்த நிறுவனத்தின் தொடக்க விழா நேற்று மாலை ஹைதராபாத்தில் நடைபெற்றது.

அன்றாட நாம் உண்ணும் பழங்களின் தோல்களை வைத்து ஸ்டைலிஷ் ஹேன்ட் பேக்குகளை உருவாக்கி இருக்கிறார்.  பழத்தோல்களிலிருந்து பைகள் உருவாக்கப்படுவது, உலகத்திலேயே இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஹேன்ட் பேக்குகளை விற்பனை செய்ய சர்ஜா என்ற பெயரில், புதிய நிறுவனத்தை அவர் துவங்கி உள்ளார்.

விழாவில் நடிகர் கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசன், அர்ஜூனின் மூத்த மகள் ஐஷ்வர்யா அர்ஜூன் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர்.