பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம்

பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரியின் மாணவ செவிலியர் சங்கம் சார்பில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.

விழாவை நான்காம் ஆண்டு மாணவர்கள் ஒருங்கிணைத்தனர். இதில் கல்லூரி முதல்வர் ஜெயசுதா வாழ்த்துரை வழங்கினார். நிகழ்வில் மாணவர்கள் பூக்கோலம் இட்டு திருவாதிரை நடனமாடினர். மன்னர் மகாபலி வேடமிட்டு, பாரம்பரிய உடை அணிந்து அலங்கார அணி வகுப்பு நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.