சி.எம்.எஸ் கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம்

சி.எம்.எஸ் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. மலர் அலங்காரம் மற்றும் சண்டமேளத்துடன் கொண்டாட்டம் தொடங்கியது.

நிகழ்வில் சி.எம்.எஸ் கல்லூரி முதல்வர் பாலகிருஷணன் வரவேற்புரை வழங்கினார். சி.எம்.எஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் ராஜகோபாலன் குத்து விளக்கு ஏற்றி வைத்து தலைமையுரை ஆற்றினார்.

சி.எம்.எஸ் கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் அசோக், செயலாளர் வேணுகோபால், துணைச்செயலாளர் கீரீசன், பொருளாளர் ரவிக்குமார், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் இதில் கலந்து கொண்டனர்.