ஆர்.வி கல்லூரியில் இலவச கண் பரிசோதனை

காரமடை டாக்டர்.ஆர்.வி கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை திங்கட்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் ரூபா தலைமையேற்றார். மேட்டுப்பாளையம், ஐ பவுண்டேசன் மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அலுவலர் ஸ்ரீதரன் தலைமையிலான குழு பங்கேற்று கண் பரிசோதனை செய்தனர்.

இப்பரிசோதனையில் கல்லூரியின் முதலாம் ஆண்டு பயிலும் 230 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்.