ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் நிஷா காந்தி மலர் கோவையில் பூத்தது

குளுமையான சீதோஷ்ண நிலை உள்ள பகுதிகளில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் பூக்கும் நிஷா காந்தி மலர்கள் கோவையில் பூத்துள்ளது.

நிஷா காந்தி மலர்கள் ஆண்டுக்கு ஒரே ஒருமுறை, ஒரு நாள் மட்டும் பூக்கக்கூடியவை. தமிழக கேரள எல்லைப் பகுதியான தேனி மற்றும் இடுக்கி மாவட்ட பகுதிகளில் நிஷாகந்தி மலர் செடிகள் அதிக அளவில் உள்ளன.

அதிக வாசனையுடன் இரவில் மட்டுமே பூக்கும் இந்த மலர் குளுமையான சீதோஷ்ண நிலை உள்ள இடங்களில் மட்டுமே பூக்கும் தன்மை கொண்டது.

இந்த நிலையில், கோவை பகுதியில் இந்த வியக்கத்தக்க மலர்கள் மலர்ந்துள்ளன. செல்வபுரம் நாடார் வீதியில் கவின் என்பவரது வீட்டில் இந்த நிஷா காந்தி மலர்கள் 12 மலர்ந்துள்ளன. இந்த அதிசய மலர்களை அப்பகுதி மக்கள் கண்டு வியப்படைந்துள்ளனர்.