ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லுாரியில் விளையாட்டு போட்டியில் வென்றோர்க்கு பாராட்டு

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லுாரியின் உடற்கல்வித்துறை சார்பில், தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, கல்லுாரி மாணவிகளுக்கான த்ரோபால், கராத்தே போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா கல்லுாரி கலையரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை காயத்ரி பங்கேற்று மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். கல்லுாரியின் முதல்வர் சித்ரா, உடற்கல்வி இயக்குனர் ஜாய்சி, பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பின்னர் கல்லுாரி மாணவிகளின் கராத்தே நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் காயத்ரியுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மாணவிகளின் விளையாட்டு குறித்து பல்வேறு சந்தேங்களுக்கு விடை அளித்தார்.