கோவை மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி இசை, உணவு என வார இறுதி நாளில் கொண்டாட்டம்

கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் அதிகமான பொதுமக்களை கவரும் வண்ணம், வார இறுதி நாட்களில் பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளதாகவும், இதற்கு அனுமதி இலவசம் எனவும் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில்,

உக்கடம் பெரியகுளத்தில் “All in All அங்காடி” என்ற நிகழ்ச்சியில், கலந்து கொண்டு தங்கள் பொருட்களை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் விரும்பும் அனைத்து தரப்பினரும் ஸ்டால் முன்பதிவு செய்ய வரவேற்கப்படுகிறார்கள். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். இந்நிகழ்ச்சியானது செப்டம்பர் 3, 4 தேதிகளில் காலை 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெறும்.

வாலாங்குளத்தின் மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் இசையும் தேநீருமாக “இன்னிசை Evening” என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியானது செப்டம்பர் 10 அன்று மாலை 5.00 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் உங்கள் இசைக்குழுவினருடன் பங்கேற்க https://forms.gle/uKb3pMbmpWCa7Mn58 என்ற லிங்கில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஆரோக்கியமான வாழ்வின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “சைக்ளத்தான்” (Cyclothon) நிகழ்ச்சியானது செப்டம்பர் 18 காலை 6.00 மணியளவில் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பொதுமக்கள், தன்னார்வலர்களும் ஆர்வத்துடன் கலந்து கொள்ளலாம்.

கோவையில் ஒரு மாபெரும் உணவுத் திருவிழாவாக “அறுசுவை Street” அமைய உள்ளது. பாரம்பரிய மற்றும் சமகால உணவுகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொருட்டு இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 24 மற்றும் 25 ஆகிய இரு தேதிகளில் காலை 11.00 மணி முதல் இரவு 9.00 மணிவரை நடைபெற உள்ளது. மேலும், உங்கள் ஸ்டால்களை முன்பதிவு செய்திட 9943944223 மற்றும் 8637490177 ஆகிய கைபேசி எண்கள் வாயிலாகவும், https://forms.sle/b2ZD$VIEVYBZD2We8 என்ற தளத்திலும் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.