ஆனைகட்டியில் இன்று மாலை இசையுடன் கூடிய ‘நிலா கிராமம்’ நிகழ்ச்சி

கட்டுமானத்துறையைச் சேர்ந்த பேஸ் 4 அமைப்பு சார்பில் ஆனைகட்டி பகுதியில் உள்ள மை வில்லேஜ் ரிசாட்டில் இன்று மாலை ‘நிலா கிராமம்’ என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

செயற்கை நிலாவை வடிவமைத்து அதைச் சுற்றிலும் பார்வையாளர்களை ஒருங்கிணைத்து நிலா கிராமம் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பிரபல பின்னணி பாடகர் பிரதீப் குமார் கிராமிய பாடல்களை ஒருங்கிணைத்து பாட உள்ளார். இதில் இசை கலைஞர்கள் பலரும் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. கடலை மிட்டாய், பஞ்சுமிட்டாய், டீக்கடை அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. பங்கேற்போர்க்கு கிராமிய உணவு பரிமாறப்படவுள்ளது.

மாலை 5:00 மணி முதல் இரவு 9 மணி வரை கிராமிய கதைகள், இசை நிகழ்ச்சி, கிராமிய சத்துள்ள உணவுகள் வழங்கப்பட உள்ளதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு நுழைவு கட்டணமாக நன்கொடை டிக்கெட்டுகள் குறைந்த கட்டணத்தில் பெறுவதற்கு பேஸ் 4 நிறுவனத்தின் வெப்சைட் மற்றும் 8110011310 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.