நாட்டிற்காக நீங்கள் கண்ட கனவை நிறைவேற்றுவேன் அப்பா!

– ராகுல்காந்தி ட்வீட்

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78 வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகிறது. அரசியல் தலைவர்கள் பலரும் அவரை இந்த நாளில் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

டெல்லி வீர் பூமியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பலரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் தனது தந்தையின் பிறந்த நாளில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அப்பா எப்போதும் நீங்கள் என்னுடன், என் இதயத்தில் இருக்கிறீர்கள். நாட்டிற்காக நீங்கள் கண்ட கனவை நிறைவேற்ற எப்போதும் நான் முயற்சிப்பேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளில் அவருக்கு என் அஞ்சலிகள் என்று தெரிவித்துள்ளார்.