சங்கரா கல்லூரியில் சுதந்திர தின விழா

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் 76 வது சுதந்திர தின விழா கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் சங்கரா கல்வி நிறுவன செயலாளர் ராமச்சந்திரன் கொடியேற்றி வைத்து சுதந்திர தின சிறப்புரையாற்றினார்.

இந்தியராக இருப்பதில் பெருமிதம் கொள்ளுமாறும், ஒருவரின் கடமையை பொறுப்புடன் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஒவ்வொருவரும் தனது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், மனித சமூகத்தை மதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் சங்கரா கல்வி நிறுவன இணைச் செயலர் சாந்தியா ராமச்சந்திரன், துணைச் செயலர் நித்யா ராமச்சந்திரன், சங்கரா கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் பட்டாபிராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி முதல்வர் ராதிகா, சங்கரா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கணேசன், துணை முதல்வர் பெர்னார்ட் எட்வர்ட் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சுதந்திர தின விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சங்கரா கல்வி நிறுவனங்களின் செயலாளர் ராமச்சந்திரன் பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சங்கரா கல்வி நிறுவனங்களின் அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.