கோவை வ.உ.சி மைதானத்தில் 76 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

76 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை வ.உ.சி மைதானத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.எஸ் சமீரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உள்ளிட்ட பல அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும், நிகழ்வில் மருத்துவர்கள், காவல் துறை அதிகாரிகள், அரசு பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.