தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி: மதுரை அணி சாம்பியன்

தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில், திண்டுக்கல் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய மதுரை அணி சாம்பியன் பட்டம் வென்றது.

தமிழ்நாடு பிரிமீயர் லீக் பைனலில் மதுரை, திண்டுக்கல் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 117 ரன்களுக்கு சுருண்டது. ஜெகதீசன் அதிகபட்சமாக 51 ரன்கள் எடுத்தார். மதுரை அணியின் அபிஷேக் தன்வார் 4, லோகேஷ் ராஜ் 3, வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட் வீழ்த்தினர். எளிய இலக்கை விரட்டிய மதுரை அணிக்கு முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சிலம்பரசன் அதிர்ச்சி அளித்தார். இருப்பினும் அருண் கார்த்திக் அரைசதம்(75) விளாசினார். அவருக்கு ஷிஜித்(38) ஒத்துழைப்பு தந்தார். 17.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டிய மதுரை அணி சாம்பியன் பட்டம் வென்றது.