துப்பாக்கி  சுடுதல் போட்டியில் நேரு கல்லூரி மாணவர்கள் சாதனை !

கோவை நேரு கல்வி குழுமத்தில் உள்ள  நேரு ரைபில் கிளப் மாணவர்கள் கடந்த ஜூலை 24-31 தேதியில் , திருச்சியில்   நடைபெற்ற  மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்றினார்கள்.  அப்போட்டியில் கலந்துகொண்ட மாணவர்கள்  5 தங்க பதக்கங்கள் , 7 வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

வெற்றி பெற்ற வீராங்கனைகளை  ஊக்குவிக்கும் வகையில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கோவை மாவட்ட ஆட்சித்தலைவர்  ஜி.எஸ். சமீரன்  மாணவர்களைப் பாராட்டி கௌரவித்தார்.