மின்கட்டண 3419 கோடி ரூபாய்  –  அதிர்ச்சியில் வீட்டு ஓனர் ஆஸ்பத்திரியில் அட்மிட்

மத்தியப் பிரதேசத்தில் மாத மின்கட்டணமாக 3 ஆயிரத்து 419 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என தகவல்  வந்ததால், வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சியில் மயக்கமடைந்தார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள  குவாலியரைச் சேர்ந்த ஒருவர்  வீட்டிற்கு மாத மின் கட்டணமாக 3,419 கோடி ரூபாய் செலுத்தவேண்டும் என தகவல் வந்ததுள்ளது. இதனை கண்ட வீடு உரிமையாளர் அதிர்ச்சியில் மயங்கி கீழே விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்த மத்தியப் பிரதேச மின்சாரத்துறை அதிகாரிகள், மின் கட்டணம் ஆயிரத்து 300 ரூபாய்தான் என்றும் தங்களது ஊழியர் தவறான தகவல் அனுப்பியதாகவும் கூறி விளக்கமளித்தனர்.