கோவை மாநகராட்சி பள்ளியில் ஆணையர் பிரதாப் திடீர் ஆய்வு

கோவை மாநகராட்சி நேரு நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இன்று ஆய்வு செய்தார் மாநகராட்சி ஆணையர் பிரதாப்.

இந்த ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையர் பிரதாப், 2ம் வகுப்பு மற்றும் 3ம் வகுப்பு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நடத்தப்படும் பாடத்திட்டங்கள் குறித்து மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினர். அவருடன் பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவ மாணவிகள் ஆகியோர் இருந்தனர்.