அதிமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இ.பி.எஸ்., திடீர் மயக்கம்

மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் பதவியேற்ற பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் முதல் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான பங்கேற்றுள்ளனர்.

மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு ,குடிநீர், கழிவு நீர் இணைப்பு கட்டணங்கள் உயர்வு, விலைவாசி உயர்வு , சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட பிரச்சனைகளை முன்னிறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் வெகு நேரமாக எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்த போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. அவர் அருகில் இருந்த நிர்வாகிகள் உடனடியாக முகத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டு அவருக்கு தண்ணீர் கொடுத்து அமர வைத்தனர்.

எடப்பாடி பழனிசாமிக்கு ஆர்ப்பாட்டத்தில் திடீர் மயக்கம் ஏற்பட்டதால், தொண்டர்கள் மத்தியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.