கோவையில் மத்திய, மாநில அரசை கண்டித்து தே.மு.தி.க ஆர்ப்பாட்டம்

கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு தே.மு.தி.க கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கோவை மாநகர மாவட்ட செயலாளர் சிங்கை சந்துரு, தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ தினகரன், வடக்கு மாவட்ட செயலாளர் சிவராமன் ஆகியோர் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு உயர்த்தி உள்ள சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும். உயர்த்தப்படவுள்ள மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என கையில் பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.

மேலும் மத்திய அரசு தற்போது உயர்த்தியுள்ள உணவுப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல் டீசல் கேஸ் விலையை குறைத்து விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தே.மு.தி.க தொண்டர்கள் கலந்து கொண்டனர்.