விமானத்தில் அழுத குழந்தை: இறக்கிவிடப்பட்ட பெற்றோர்

3 வயது குந்தை அழுதற்காக , அக்குழந்தையுடன் சேர்த்து, இந்திய தம்பதியை இங்கிலாந்து விமான ஊழியர்கள் கீழே இறக்கிவிட்டனர். இது குறித்து மத்திய அரசிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த ஏ.பி.பாதக் என்பவர், மனைவி, 3 வயது குழந்தையுடன் இங்கிலாந்து தலைநகர் லண்டனிலிருந்து ஜெர்மனியின் பெர்லின் செல்லும் விமானத்தில் பயணித்துள்ளார். விமானம் கிளம்பும் போது, 3 வயது குழந்தை அழுதுள்ளது. கோபமடைந்த விமான ஊழியர்கள், குழந்தையை மிரட்டியுள்ளனர். பயந்து போன குழந்தை தொடர்ந்து அழவே, விமானத்தை மீண்டும் விமான நிலையத்திற்கு கொண்டு வந்து, 3 பேருடன், மேலும் சில குழந்தைகளையும் கீழே இறக்கிவிட்டு சென்றனர். இந்தியர்கள் குறித்து அவதூறாகவும், இனவெறியை தூண்டும் வகையிலும் பேசியுள்ளனர். இது குறித்து விமான நிறுவன செய்தி தொடர்பாளர் கூறுகையில், இந்த குற்றச்சாட்டுகளை தீவிரமாக எடுத்துள்ளதாகவும், இது போன்ற செயல்களை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம் எனவும்  விரிவான விசாரணை நடந்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.