மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது. தற்போது 2021 – 2022 கல்வி ஆண்டுக்கான மிதிவண்டிகள் வழங்குவதற்காக அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இந்தாண்டு மாணவர்களுக்கு விலைவில்லா மிதிவண்டி வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 6 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் விலையில்லா மிதிவண்டி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்தாண்டு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை சென்னை நுங்கம்பாக்கம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். முதற்கட்டமாக 12ஆம் வகுப்பு மாணவர்கள் 6.5 லட்சம் பேருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன.