கே.பி.ஆர் கல்லூரியில் ‘ஆசிரியர்களுடன் அன்பில்’ நிகழ்ச்சி

கோவை, கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் கல்வியாளர்கள் சங்கமம் இணைந்து ‘ஆசிரியர்களுடன் அன்பில் நம்மில் ஒருவர்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

கே.பி.ஆர் நிறுவனங்களின் தலைவர் கே.பி.ராமசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு, தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் ஆசிரியர்களின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் அமைச்சர் பதிலளித்தார்.

மேலும் இந்நிகழ்விற்கு கே.பி.ஆர். தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் அகிலா, கே.பி.ஆர் கலை கல்லூரியின் முதல்வர் பாலுசாமி மற்றும் கே.பி.ஆர் நிறுவனங்களின் முதல்வர்கள், பேராசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.