நிறுவனச் செயலர் தேர்வில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் தேர்ச்சி

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் நிறுவனச் செயலர் நுழைவுத் தேர்வில், தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்திய நிறுவனச் செயலர் நிறுவனம் சார்பில், நிறுவனச் செயலர் நுழைவுத்தேர்வு (சி.எஸ்.இ.இ.டி.), கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. அதன் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், பி.காம். சி.எஸ். துறை இரண்டு மற்றும் மூன்றாமாண்டு மாணவர்கள் 22 பேர் தேர்ச்சி பெற்று பெற்றுள்ளனர்.

தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரம்: ராகுல், கோமதி, மிருத்திகா, சோனியா கண்டர், தருண், சுஜித், குமுதினி, அரவிந்தபிரபு, ஸ்ரீபவன், ஹர்ஷா தாஸ், ஐஸ்வர்யா, சௌமியா, ஹரிணி, அஸ்வின்குமார், சித்தார்த், பிரியதர்ஷினி, தினேஷ்குமார், வீரஹஸ்தான், சினேகா, சுவேதா, நித்யஸ்ரீ, ஹரி ஓம் படக் ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த நிறுவனச் செயலர் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார், பி.காம். சி.எஸ். துறைத்தலைவர் சந்தான கிருஷ்ணன் ஆகியோர் பாராட்டினர்.