நாக்கு எரிச்சலுக்கு கீரை சாப்பிடுங்க  

நாக்கில் ஏற்படும் எரிச்சல் எல்லோருக்கும் ஒரு வேதனையான உணர்வை ஏற்படுத்தக் கூடியது. வாயின் எரிச்சல் நோய் என்பது ஒருவர் தனது வாய் பற்றி எறிவது போன்ற உணர்வை ஏற்படுத்தக்கூடிய புண்.

மிகவும் சூடான உணவை உண்பதாலோ அல்லது குடிப்பதாலோ ஒருவருக்கு புழுக்கமான உணர்ச்சி ஏற்படுகிறது. இது நாக்கு, வாயின் மேற்பகுதி, ஈறுகள் மற்றும் தொண்டையில் ஒரு வித அதிர்ச்சியை ஏற்படுத்தும் மற்றும் யாரையும் எந்த நேரத்திலும் பாதிக்கும்.

இந்த நோய்  ஒரு நபருக்கு மனத் தளர்ச்சி, பசியின்மை மற்றும் தூக்கம் கெடுதல் போன்ற இன்னல்களைத் கொடுக்கும். மேலும், இது தொண்டையில் பிரண்டுகிற உணர்ச்சியும், மயக்கமான நிலை, துவர்ப்பு சுவை மற்றும் வேதனையையளிக்கும். இந்நோய் மாதவிடாய் நின்ற பெண்களிடையே மிகவும் கணிசமாக இருக்கிறது.

நாக்கில் எரிச்சல் உணர்வால் உண்டாகும் அறிகுறிகள் வாய், உதடுகள், ஈறுகள், சுவை உணர்வு மற்றும் நாக்கில் எரியும் உணர்வு போன்றவை தோன்றுதல், நாள் அதிகமாக அதிகமாக வலி அதிகமாக உணரலாம். வறண்ட வாய் பிரச்சினை, வாய்ப்புண் தோன்றுதல், தாகம் அதிகரித்தல், பசி மற்றும் சுவையிழப்பு, நாக்கின் நுனியில் நடுக்கத்துடன் கூடிய உணர்வு வாயை கடித்தல் அல்லது உலோகச் சுவை தோன்றுதல், வலி மற்றும் காயங்கள் எரிதல்.

நாக்கில் ஏற்படும் எரிச்சலால் மூச்சுத்திணறல், பல் அழுகல் போன்றவை கூட தோன்றலாம். நாக்கில் ஏற்படும் எரிச்சலால் பேச முடியாமல் தொடர்பு கொள்வதிலும் சிக்கலாகலாம். நீரிழிவு மற்றும் தைராய்டு மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் வாய் எரியும் உணர்வுக்கு அதிகம் பாதிக்கப்படுகின்றன. சில உணவு பொருட்கள் பலருக்கு ஒவ்வாமையை அளிக்கும்.

வேக வைத்த காய்கறிகளை எப்பொழுதும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் வேக வைத்த உணவுகள் வீக்கம் மற்றும் வலிகளை குறைக்க உதவி செய்யும். அமிலப் பொருட்கள் அடங்கிய உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.  சிட்ரஸ் பழ ஜூஸ் போன்றவை உங்கள் பல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

வைட்டமின் பி12, இரும்புச்சத்து போன்ற அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக கல்லீரல், பால் பொருட்கள், முட்டையின் மஞ்சள் கரு போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். கீரை, ப்ரக்கோலி, பச்சை காய்கறிகள் போன்றவற்றையும் அடிக்கடி எடுத்து வருவது நல்லது.

வாய்க்கு குளிர்ச்சி தரும் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இவை பக்க விளைவுகளை குணப்படுத்த உதவுகிறது.உணவை சூடாக சாப்பிட கூடாது. வெந்நீர், சூப் வகைகள், சூடான பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இது நாக்கில் எரிச்சலை உண்டு செய்ய கூடும். நாக்கில் எரிச்சல் தொடங்கும் போதே சுத்தமான வெண்ணெய் நாக்கில் தடவி வந்தால் எரிச்சல் உணர்வு இருக்காது.