தமிழ்நாடு வேளாண் பல்கலையில் மக்காசோளம் விதைப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வேளாண்மை மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் கிழக்கு பண்ணையில் மக்காசோளம் விதைப்பு செய்தனர்.

இளங்கலை வேளாண்மை படிக்கும் மாணவர்கள் தாங்கள் முதல் இரண்டு வருடத்தில் படித்த அடிப்படை அறிவியல் தொழில்நுட்பங்களைக் கொண்டு அவர்களாகவே மக்காசோளம் பயிரிடவேண்டும். மாணவர்களுக்கு 4 சென்ட் அளவு நிலம் வழங்கப்பட்டுள்ளது. அதில் அவர்கள் வயலை பண்படுத்துவது முதல் அறுவடை முதலான அனைத்து பணிகளையும் செய்ய வேண்டும்.

துவக்க விழாவில் கலந்து கொண்ட பல்கலைக்கழக உயர்அதிகாரிகள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களை பேராசிரியர் கல்பனா வரவேற்றார். உழவியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் பன்னீர்செல்வம் மாணவர்கள் மேற்கொள்ள வேண்டிய மேலாண்மை முறைகள் குறித்து விளக்கம் அளித்தார். வேளாண்மை முதன்மையர் வெங்கடேசபழனிசாமி நடவு விழாவை துவக்கி வைத்தார்.

பயிர் மேலாண்மை இயக்குநரகம் இயக்குநர் கலாராணி, சோமசுந்தரம் (வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககம்) மற்றும் மரகதம், முதன்மையர் (மாணவர் நல இயக்ககம்) மாணவர்களுடன் கலந்துரையாடினார்கள்.

பின்பு பல்கலைக்கழக உயர் அதிகாரிகள், பேராசிரியர்கள் வயலில் இறங்கி மக்காசோளம் விதைப்பை துவக்கிவைத்தனர்.