வலுதூக்கும் போட்டியில்
எஸ்.டி.சி மாணவர் புதிய சாதனையுடன் முதலிடம்

தேசிய ஜூனியர் வலுதூக்கும் போட்டியில் பொள்ளாச்சி ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி (எஸ்.டி.சி) மாணவர் புதிய சாதனை படைத்து முதலிடம் பெற்றுள்ளார். இப்போட்டிகள் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஜூலை 7 முதல் 10 ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதில் சென்ற மாதம் அவிநாசியில் நடைபெற்ற மாநில ஜூனியர் வலுதூக்கும் போட்டிகளில் முதலிடம் பெற்று தமிழகத்தின் சார்பில் தேசிய ஜூனியர் போட்டிகளில் பங்கேற்ற பொள்ளாச்சி ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி மாணவர் சஞ்சய்குமார் 120 கிலோ எடைப்பிரிவில் 847.5 புள்ளி கிலோ எடை தூக்கி சாதனை படைத்துள்ளார்.

2021ல் ஹரியானா வீரர் தர்மேந்திரா வசம் இருந்த சாதனையான 835 கிலோவை முறியடித்து புதிய சாதனையுடன் இவர் முதலிடம் பிடித்துள்ளார்.

வெற்றி பெற்ற வீரர் சஞ்சய்குமாரை கல்லூரியின் தலைவர் சேதுபதி, துணைத்தலைவர் வெங்கடேஷ், செயலர் விஜய மோகன், முதல்வர் சோமு, முதன்மை இயக்குனர் நந்தகோபால், உடற்கல்வித்துறை இயக்குனர் பாரதி, துணை இயக்குனர்கள் ரேவதி, சதாம் உசேன் உள்ளிட்டோர் பாராட்டினர்.