வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நிறுவன நாள் மற்றும் பட்டத்தகுதி பெறும் விழா

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஜூலை 1ம்தேதி பொன் விழா நிறுவன நாள் மற்றும் தொலைநிலைக் கல்வி பட்டத்தகுதி பெறும் விழா நடைபெற்றது.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தை உருவாக்கிய சிற்பிகளை நினைவு கூறும் வகையிலும், பல்கலைக்கழகத்தின் சாதனைகளை அங்கீகரிக்கவும், காலம் வயது வரம்பின்றி அறிவியல் சார்ந்த வேளாண் கல்வியை கற்ற 236 வேளாண் ஆர்வலர்களுக்கு பட்டத்தகுதி சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

மேலும், பல்கலைக்கழக பொன்விழா நிறுவன நாள் மற்றும் தொலைநிலைக் கல்வி பட்டத்தகுதி பெறும் விழாவும் நடந்தது. இதில் பல்கலைக்கழத்தின் முன்னாள் துணைவேந்தர்களான ராமசாமி, அப்துல்கரீம், ராமசாமி, முருகேஷ பூபதி மற்றும் காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் பொது இயக்குநர் மற்றும் உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டத்தில் ஆலோசகராக பணியாற்றும் முதல்வர் இலஷ்மண் சிங் ரத்தோர் பங்கேற்று பல்கலைக்கழகத்தின் பொன் நிறுவன நாள் பற்றி உரையாற்றி, சாதனையாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் விருதுகளை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து, 116 ஆண்டுகால பாரம்பரியமிக்க நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகளை பல்கலைக்கழத்தின் முன்னாள் துணைவேந்தர்களும், மூத்த அறிஞர்களும் எடுத்துரைத்தனர்.

இவ்விழாவிக்கு கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். வேளாண் கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கத்தில் பல வியத்தகு சாதனைகளை புரிந்த வேளாண் அறிஞர்களுக்கு விருதுகளும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வியில் பயின்ற பட்டதாரிகளுக்கு பட்டச்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

மேலும், இந்த பல்கலைக்கழத்திற்காக பல்லாண்டு கால சேவை புரிந்தோருக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன. அதோடு பல்கலைக்கழத்தின் மூத்த அறிவுடையோர்களும், பெரியோர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த விழாவினை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முதல்வர் கீதாலட்சுமி வரவேற்புரையாற்றி பல்கலைக்கழகத்தின் சிறப்பம்சங்கள் பற்றி உரையாற்றினார். விழாவின் இறுதியாக, பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முதல்வர் தமிழ்வேந்தன் நன்றியுரை வழங்கினார்.