கோவையில் நடைபெற்று வரும் ஜூனியர் பிரிவினருக்கான மாநில அளவிலான தடகள போட்டியில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு உள்ளனர்.

கோவையில் உள்ள சஹோதயா பள்ளி நிறுவனம் சார்பில் மாநில அளவிலான ஜூனியர் தடகள போட்டிகள் கோவையில் உள்ள நேரு விளையாட்டு மையத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியை சுகுணா குழுமத்தின் சேர்மேன் லக்ஷ்மி நாராயணசாமி துவக்கி வைத்தார். போட்டியின் துவக்கமாக மாணவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 71 பள்ளிகள் கலந்து கொண்டு உள்ளனர். இந்த போட்டியில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு உள்ளனர். இந்த போட்டியில், 12வயது , 10வயது மற்றும் 8வயதிற்கு உட்பட்டோர் என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இன்று ஒரு நாள் நடைபெறும் இந்த போட்டியில், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெறுகிறது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் போட்டிகளும் வழங்கப்பட்டது.