பாரதிய வித்யா பவன் பள்ளியில் வரவேற்பு விழா

கோவை அஜ்ஜனூர் பகுதியில் அமைந்துள்ள பாரதிய வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உற்சாக வரவேற்பு விழா வியாழக்கிழமை அன்று நடைபெற்றது.

விழாவில் பள்ளி முதல்வர் மகேஸ்வரி சிறப்புரையாற்றி பேசுகையில், மாணவர்கள் எவ்வித ஐயமும் தயக்கமும் இன்றி நன்முறையில் கல்வி பயில வேண்டும் என்பதோடு, உடல் நலத்தோடு உள நலமும் பேணும் விளையாட்டிலும் ஈடுபடவேண்டும் என்று கூறினார்.