அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று ECRP ICU வை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்.

மேலும் டாக்ஸிகாலஜி ஐசியூ (TOXICOLOGY ICU) வை திறந்து வைத்து, இலவச கண் கண்ணாடியை பயனாளிகளுக்கு வழங்கினார் அமைச்சர் மா.சுப்ரமணியன்.

அதனைத்தொடர்ந்து JICA கட்டிடத்தின் வேலையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மருத்துவக்கல்லூரி டீன் நிர்மலா, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மேயர் கல்பனா, மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.