நீர்ப் பற்றாக்குறையும், மேலாண்மையும்

நீர்ப் பற்றாக்குறை:

நீர்ப் பற்றாக்குறை ஏற்படும்போது, பயிர்களின் முக்கிய சத்துகளான பொட்டாட்சியம், மக்னீசியம் பற்றாக்குறை அதிகம் காணப்படும். இதுமட்டுமின்றி கரும்பில் துத்தநாகம், போரான் நுண்ணூட்டச் சத்துகளின் பற்றாக்குறையும் ஏற்படும். இந்தக் குறைபாட்டை நீக்க 20 சதவீதம் அம்மோனியம் பாஸ்பேட், 0.5-1 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு, 0.5 சதவீதம் துத்தநாக சல்பேட், 0.5-1 சதவீதம் இரும்பு சல்பேட் அத்துடன் 1 சதவீதம் யூரியா, 0.3 சதவீதம் போரிக் அமிலம் ஆகியவற்றை பயிர்களுக்கு ஏற்ப தெளிக்க வேண்டும்.

நீராவிப் போக்கைத் தடுக்க:

பயிர்களின் நீராவிப் போக்கைத் தடுக்கப் பயன்படும் பொருள்கள் ஆன்டி-டிரான்ஸ்பிரன்ட்ஸ் எனப்படும் இலைத் துளைகளை மூடுவதால் அதிக அளவு நீராவி வெளியேறுவதைத் தடுக்க முடியும்.

2.4டி, எத்ரல், டிபா, சக்சினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம், சைக்கோசெல் ஆகியன இலைகளை மூடும் தன்மை கொண்டவை. அதேபோல் கயோலின், சீன களிமண், கால்சியம் பை கார்பனேட், சுண்ணாம்பு நீர் ஆகியவையும் நீராவிப் போக்கை தடுக்கும் தன்மை கொண்டவை. போதுமான அளவு மழை பெய்யாதபோது பயிர்களின் மகசூலை அதிகரிக்கவும், கடுமையான வறட்சி நிலவும்போதும், ஒரு நிலையான மகசூலை எடுக்க இந்த முறை உதவுகிறது. தானியங்கள் அளவு பாதிக்கப்படுவதில்லை. விதைகளின் தரம் உயர்கிறது. குறைந்த முதலீட்டில் பயிர்களின் சேதம் தவிர்க்கப்படுகிறது.