தமிழர்கள் சொல்லித்தந்த பொருளாதாரம் ‘உழைப்பின் வழி செல்வம்!’

-முகமது ஜியாபுதீன், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி

கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியின் முதுகலை பொருளியல் மற்றும் ஆராய்ச்சி துறையின் பொருளியல் சங்கத்தின் துவக்கவிழா இன்று கல்லூரியில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி முகமது ஜியாபுதீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

நேரு கல்வி குழுமத்தின் மக்கள் தொடர்பு இயக்குனர் முரளிதரன் சிறப்பு அழைப்பாளராக பங்குபெற்றார்.

நிகழ்வில் முகமது ஜியாபுதீன் பேசுகையில், ஒருவர் அறத்தின் வழியிலும், தன் திறனுக்கு உரிய வழியிலும் நின்று பொருளை ஈட்டும் போது மட்டும் தான் அவை உண்மையான மகிழ்ச்சியை தரும் என்று தமிழ் இலக்கணங்கள் கூறுகிறது என்று எடுத்துரைத்தார்.