கோவை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் ரூ.19 கோடி நிதி பற்றாக்குறை

கோவை மாநகராட்சிக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நடப்பு ஆண்டில் ரூ.19 கோடி நிதி பற்றாக்குறை இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சிக்கான பட்ஜெட் தாக்கல் இன்று நடைபெற்றது. மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் விக்டோரியா ஹாலில் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

அதன்படி, 2022 – 23 நிதியாண்டில் வருவாய் மற்றும் மூலதன வரவு ரூ.2,317.97 கோடி. வருவாய் மற்றும் மூலதன செலவு ரூ.2,337,28 கோடி செலவு. 2022 – 23 நிதியாண்டில் நிதி பற்றாக்குறை ரூ.19.31 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் பின்வருமாறு:

2 நாட்களுக்கு ஒருமுறை சீரான குடிநீர் வழங்குதல் – ரூ5.36 கோடி
பில்லூர் 2ம் குடிநீர் திட்டக் குழாயை மாற்றி அமைத்தல் – ரூ5 கோடி.

அம்ரூத் 2.0 வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சிக்கு ரூ.883 கோடி

அம்ரூத் 24/7 குடிநீர் வழங்கல் திட்டத்திற்கு ரூ.646.71 கோடி.

நீர் நிலை தூர்வாருதல் – மழைநீர் சேகரிப்பு தொட்டி புனரமைத்தல் ரூ.40 லட்சம். மாதிரி பள்ளி அமைக்க ரூ.2.46 கோடி.

மாநகராட்சி பள்ளி உட்கட்டமைப்பு மற்றும் கழிவறை மேம்படுத்த – ரூ 8 கோடி.

பள்ளிகளில் நூலகம் அமைக்க ரூ.50 லட்சம்.

விளையாட்டு திறனை மேம்படுத்த – நூலகம் அமைக்க, அறிவுசார் மையம் அமைக்க ரூ.2.50 கோடி.

திடக்கழிவு மேலாண்மை ரூ.21.2 கோடி.

அரசு நலத்திட்டங்கள் ரூ. 2.97 கோடி.

சாலை பணிகள் ரூ.189.72 கோடி.

பாதாள சாக்கடை திட்டம் – ரூ.1436.58 கோடி.

பொது சுகாதாரம்
ரூ. 18.91 கோடி.

பூங்கா மற்றும் விளையாட்டு மைதானம் ரூ.13 கோடி.

மகளிர் மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.31.1 கோடி.
மனிதவள மேம்பாடு ரூ.4.30 கோடி.
குறைதீர்க்கும் சேவைகள் ரூ.320.22 கோடி.

வருவாய் பிரிவு வசூல் மையம் மற்றும் மேம்பாடு ரூ44.68 கோடி.இதர திட்டங்கள் ரூ15.45 கோடி.

இவ்வாறு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.