பாஜக வேட்பாளர் விஷ்ருதா ஜனநாயக கடமை ஆற்றினார்

கோவை ராம்நகர் ரங்கநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாஜக வேட்பாளர் விஷ்ருதா அவரது வாக்கினை பதிவு செய்தார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு பதிவு சனிக்கிழமை நடைபெற்றது.

கோவை மாநகராட்சி 67 வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விஷ்ருதா. இவர், ராம்நகர் ரங்கநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.