பாஜக சார்பில் 47 வது வார்டில் போட்டியிடும் வேட்பாளரின் தேர்தல் அலுவலகம் திறப்பு

பாஜக சார்பில் 47 வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் மாருதி பாலு என்ற பொன்னுராஜ் – இன் தேர்தல் அலுவலகம் இன்று திறக்கப்பட்டது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து முடிந்தன.

தமிழகம் முழுவதும் பாஜக தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தொடர்ந்து பாஜகவினர் பல்வேறு இடங்களில் தங்களது தேர்தல் பணிகளை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் கோவை மாநகராட்சி 47வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மாருதி பாலு என்ற பொன்னுராஜ் – ன் தேர்தல் அலுவலகத்தை பாஜக மாநில பொது செயலாளர் ஜி.கே செல்வகுமார் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

தொடர்ந்து அப்பகுதியில் மக்களின் குறைகளை பெற்று கொண்டு நிவர்த்தி செய்வதற்காக இந்த அலுவலகம் திறக்கப்பட்டதாக வேட்பாளர் தெரிவித்தார்.