டெல்லியில் அமலுக்கு வந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள்

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கருத்தில் கொண்டு டெல்லியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, திரையரங்குகள், ஜிம், பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு அறிவித்துள்ளன.

டெல்லியில் பகுதி ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. திரையரங்குகள், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்டவைகளை மூட டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. மெட்ரோ, உணவகங்களில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

  • டெல்லியில் இரவு ஊரடங்கு 10 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும்.
  • தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும்.
  • அத்தியாவசிய சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • திருமண நிகழ்வுகளில் 20 பேர் வரை மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.
  • அதேபோல், இறுதிச்சடங்குகளிலும் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.
  • வணிக வளாகங்கள், கடைகள் ஒற்றப்படை – இரட்டைப்படை தேதிகள் அடிப்படையில் இயங்க அனுமதிக்கப்படும். காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே கடைகள் இயங்க அனுமதி உண்டு.
  • ஆன்லைன் டெலிவரிகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. தனியாக இருக்கும் கடைகள் ஒற்றைப்படை – இரட்டைப்படை தேதிகள் கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டியதில்லை. மத அரசியல் கூட்டங்கள் செயல்பட அனுமதி கிடையாது.