மூளைச்சாவு அடைந்த இளைஞன் மறுவாழ்வு அளித்தார்

கோவை மாவட்ட பீளமேடு பகுதியில் வசித்து வந்த மணிகண்டன் 22 வயது இளைஞன் கடந்த மே 6-ம் தேதி நான்கு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவர் சூலூர் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

 அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை, அவிநாசி ரோடு கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

  இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது. தொடர்ந்து அவரது தாய் லதா மற்றும் அக்கா தீபா உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். அவரது இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், மற்றும் கண்கள் ஆகியவை தானமாக பெறப்பட்டது.

 கல்லீரல் மற்றும் சிறுநீரகம் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும், இதயம் மற்றும் நுரையீரல் சென்னையுள்ள தனியார் மருத்துவமனைக்கும் மற்றும் கண்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது. 

 இதுகுறித்து கே.எம்.சி.எச். மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல ஜி பழனிசாமி  கூறுகையில், “மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். தற¢போது உடல் உறுப்பு தானம் வழங்கிய மணிகண்டன் குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.