கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காரமடையில் உள்ள கிறிஸ்து அரசர் பொறியியல் கல்லூரியில் 11.05.2018 அன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த தனியார் வேலைவாய்ப்பு நேர்காணல் நிகழ்ச்சியில் படிக்காதவர்கள் முதல் 10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், அனைத்து பட்டதாரிகள், என அனைத்து கல்வி தகுதி உடையவர்களுக்கும் நேர்காணல் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. தனியார் துறையினர் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ள இந்த நேர்காணலில் மனுதாரர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை.
இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் மனுதாரர்கள் பெருமளவில் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு பெற்று பயனடையலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.