71 ஆண்டுகளைக் கடந்த இந்திய அரசியலமைப்பு சட்டம்

இந்திய அரசியலமைப்பு சட்டம் அதிகாரப்பூர்வமாக ஏற்று கொள்ளப்பட்டு 72 ஆண்டுகள் ஆகிறது.
இதனை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 26-ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1949-ல் நவம்பர் 26-ம் தேதி இந்திய அரசியலமைப்பு ஏற்று கொள்ளப்பட்டது. மேலும் ஜனவரி 26, 1950 அன்று முதல் இது நடைமுறைக்கு வந்தது. அரசியலமைப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட தினத்தை தான் குடியரசு தினமாக கொண்டாடுகிறோம்.

அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்று கொண்டதற்கும், அதை நடைமுறைப்படுத்துவதற்கும் இடையிலான 2 மாத காலத்தில், சட்ட வரைவை முழுமையாக படித்து மொழிபெயர்க்க (ஆங்கிலத்திலிருந்து இந்தி வரை) எடுத்து கொள்ளப்பட்டது. பின் 1950 ஜனவரி 24 அன்று அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்ட கையால் எழுதப்பட்ட 2 ஆவண பிரதிகள் இருந்தன. அடுத்த 2 நாட்களில் அவை இந்தியாவின் சட்டமாக மாறின.

கடந்த 2015-ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பின் தந்தையாக குறிப்பிடப்படும் அம்பேத்கரின் சமத்துவ சிலை மற்றும் நினைவகத்தை மும்பையில் அமைக்க அடிக்கல் நாட்டும் போது பேசிய பிரதமர் மோடி, இனி நவம்பர் 26-ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு தினமாக அனுசரிக்கப்படும் என்று அறிவித்தார்.

அம்பேத்கரை நினைவுகூர்ந்து கவுரவிக்கும் விதமாகவும், இந்திய அரசியலமைப்புக்காக அயாரது பாடுபட்ட அனைவருக்கும் மரியாதை செலுத்தும் விதமாகவும் கடந்த 2015-ல் மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்திய அரசியல் சாசன தின கொண்டாட்டத்தை அறிமுகப்படுத்தியது.

மேலும் இந்த தினமானது அரசியலமைப்பின் மதிப்பை மக்களுக்கு உணர்த்துவதற்காகவும், அம்பேத்கரின் லட்சியங்களையும் சிந்தனைகளையும் மக்களிடையே பரப்பவும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. முக்கியமாக இந்த நாள் இந்திய அரசியலமைப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கொண்டாடப்படுகிறது. அரசியலமைப்பின் படி, இந்தியா ஒரு இறையாண்மை, மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசு நாடாகும்.

அரசியலமைப்பின் சித்தாந்தத்தை நிலைநிறுத்த மற்றும் கடைப்பிடிக்க அரசியலமைப்பின் முகவுரையை வாசிப்பது இந்நாளில் முக்கிய பகுதியாக இருந்து வருகிறது.