ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் நெய்க்குளம் தரிசனம்

கோவை நவஇந்தியா கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் இன்று நெய்க்குளம் தரிசனம் நடைபெற்றது.

இதில் புளியோதரை, தயிர் சாதம் மற்றும் சர்க்கரைப் பொங்கலில் நெய் ஊற்றி, நெய்க்குளம் உருவாக்கி, அதில் லலிதாம்பிகை  அம்பாளின் பிம்பத்தை விழச்செய்து தரிசனம் காட்டப்பட்டது.  இதன் மூலம் அம்பாள் மனம் மகிழ்ந்து, பக்தர்களின் வாழ்வு சிறக்க நல்லாசி வழங்குகிறாள் என்பது ஐதீகம். இதனால் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நெய்க்குளத்தில் பிம்பமான அம்பாளை தரிசனம் செய்தனர். பின்னர், இந்த அன்னப்படையல் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.