குமரகுரு கல்லூரி மாணவர்கள் புதிய தொழில்நுட்பக் கருவிகள் கண்டுபிடிப்பு

மின்சார வாகனங்கள், விவசாய நிலத்தில் உரம் தெளிக்கும் ட்ரொன் கருவிகளை குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் தயார் செய்து அசத்தியுள்ளனர்.

கோவை சரவனம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்லூரியின் நிறுவனர் அருட்ச்செல்வர் டாக்டர் மகாலிங்கம் 7ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டும், காந்தியடிகள் பிறந்தநாளை முன்னிட்டும் அக்டோபர் 2ம் தேதி முதல் 9ஆம் தேதி வரை ஆனந்த ஜோதி வாரம் எனும் நிகழ்வுகள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

தொடர்ந்து மாணவ எழுத்தாளர்களால் படைக்கப்பட்ட நம்பிக்கை பற்றிய சிறுகதைகளின் தொகுப்பு, குமரகுருவின் பங்கு அமைப்பின் மூலம் சமூக நலன் கருதி 2 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. தொடர்ந்து குழ்நதைகளின் சிறந்த தலைமைத்துவம் மற்றும் புதிய முயற்சிகளுக்கான உத்வேகத்தை வளர்ப்பதற்கான தொழில்முறை கல்வித் திட்டம், மற்றும் குமரகுரு கற்றல் மேம்பாடு, உதவி திட்டம் குறித்து குமரகுரு மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களின் படைப்புகளுக்கான கண்காட்சியின் புதிய திட்டத்தை ஐ.இ.டி.எஸ்-ன் இணை இயக்குநர் மற்றும் தலைவர் பழனிவேல் தொடங்கி வைத்தார்.

இக்கண்காட்சியில் புறஊதா கதிர் கிருமிநாசினி ரோபோ உள்ள நாட்டு தயாரிப்பான மின்சார வாகனங்கள், விவசாய நிலத்தில் உரம் தெளிக்கும் ட்ரொன் கருவி என மாணவர்களின் தொழில்நுட்ப திறனை வெளிப்படுத்தினர். எமரால்ட் நிறுவனத்துடன் இணைந்து 21 சிறந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்களுக்கான போட்டி நடைபெற்றது.