தூய்மை பாரத கையெழுத்து இயக்கம்: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

மத்திய அரசின் மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் நடத்தப்படும் தூய்மை பாரத கையெழுத்து இயக்கத்தை கோவையில் மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை அன்று தொடங்கி வைத்தார்.

மத்திய அரசின் மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் கோவை மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, தூய்மை பாரத கையெழுத்து இயக்கத்தை கோவையில் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

இந்த இயக்கத்தின் படி, கோவை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், காவல்துறை, தனியார் கல்லூரி மாணவர்கள் இணைந்து தூய்மை பணிகளை மேற்கொள்கின்றனர். மேலும் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவ குணம் கொண்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகின்றன.

இதன் தொடக்க நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, மத்திய மக்கள் தொடர்பு அலுவலக கோவை மாவட்ட துணை இயக்குனர் கரீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.