இந்தியாவில் மீண்டும் உயர்ந்த கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. 20 ஆயிரத்துக்குள் அடங்கியது. ஆனால் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,727- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் நாடு முழுவதும் 23 ஆயிரத்து 529 பேருக்கு கொரேனா பாதிப்பு உறுதியாகி இருந்தது. இந்த நிலையில், 2-வது நாளாக இன்றும் கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தில் உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

“ இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,727- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 28,246- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 277- பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 75 ஆயிரத்து 224- ஆக உள்ளது.

இந்தியாவில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,37,66,707- ஆக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3,30,43,144 – ஆக உள்ளது. கொரோனா தொற்றுக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,48,339- ஆக அதிகரித்துள்ளது.