டாடா டீயின் புதிய சக்ரா கோல்ட் கேர் அறிமுகம்!

டாடா டீ சக்ரா கோல்ட் புதிதாக டாடா டீ சக்ரா கோல்ட் கேர் என்ற புதிய ரகத்தை அறிமுகம் செய்துள்ளது. புதிய ரக டாடா டீ சக்ரா கோல்ட் கேர் நலம் பயக்கும் ஐந்து வகையான இயற்கை மூலப் பொருட்களை கலந்து தயார் செய்யப்படுகிறது. அவை, தமிழ் வீடுகளில் உடல் நலனுக்காக பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் பொருட்களான அதிமதுரம், துளசி, ஏலக்காய், இஞ்சி மற்றும் பிரம்மி ஆகியவற்றை, தங்கள் வாடிக்கையாளர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு சேர்த்துள்ளது.

இந்த அறிமுகத்தின் ஒரு பகுதியாக, தமிழர் மனதின் அன்பான பராமரிப்பு முறையை வெளிப்படுத்தும் விதமாக புதிய விளம்பரம் ஒன்றையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், தமிழர் வாழ்க்கை முறையானது தங்களது மற்றும் தங்களுக்கு பிரியமானவர்களின் உடல் நலனை காப்பதில் எவ்வாறு அக்கறை கொண்டுள்ளது என்பது சித்தரிக்கப்படுகிறது.

இப்புதிய ரகம் அறிமுகம் குறித்து, டாடா கன்ஸ்யூமர் புரொடெக்டஸ் (இந்தியா மற்றும் தெற்காசியா) பேக்கேஜ்டு பெவரேஜஸ் பிரிவின் தலைவர் புனீத் தாஸ் கூறுகையில், இந்த பெருந்தொற்று காலத்தில் வாடிக்கையாளர்கள் நம்பகமான, ஆரோக்கியமான தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். வாடிக்கையாளர்கள் தங்களையும், தங்களது அன்பானவர்களையும் தினசரி அக்கறையுடன் பராமரித்துக் கொள்ள, அவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் இந்த புதிய சக்ரா கோல்ட் கேர் ரகத்தை தமிழகத்தில் அறிமுகம் செய்துள்ளோம்.

இந்த டாடா டீ சக்ரா கோல்ட் கேர் அனைத்து இ-காமர்ஸ் தளங்களிலும், முன்னணி கடைகளிலும் கிடைக்கும்.