வி அறிமுகப்படுத்தும் இ-சிம்

தொலைதொடர்பு சேவை நிறுவனமான வி(Vi), தனது போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு எலெக்ட்ரானிக் சிம்கார்ட் என்றழைக்கப்படும் இ-சிம்-ஐ வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் இ-சிம் பயன்படுத்துவதற்கான வசதியுள்ள மொபைல்ஃபோன்களில் இனி போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் இ-சிம்-ஐ பயன்படுத்தமுடியும்.

வோடஃபோன் ஐடியாவின், தமிழ்நாடு மற்றும் கேரளாவின் க்ளஸ்டர் பிஸினெஸ் ஹெட் எஸ்.முரளி கூறுகையில், தமிழ்நாட்டில் எங்களது போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்காக இ-சிம் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் வி பெரும் மகிழ்ச்சியடைகிறது. இந்த நவீன இ-சிம் தொழில்நுட்பமானது, ஒரே சிம் மட்டுமே பயன்படுத்தக்கூடிய மொபைல்ஃபோனில் ஒன்றிற்கு மேற்பட்ட சிம் கார்ட்களை பயன்படுத்தும் கூடுதல் சௌகரியத்தை, வசதிகளை அளிக்கிறது. என்றார்.

இ-சிம்-ஐ உங்கள் மொபைல்ஃபோனில் எவ்வாறு பெறலாம்?

வி சிம்கார்ட்டை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 199 என்ற எண்ணிற்கு “e SIM <space> email id ” என்று டைப் செய்து அனுப்ப வேண்டும். உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு மின்னஞ்சல் இல்லையெனில் அதற்கு “e SIM <space> email id ”என்று டைப் செய்து 199 என்ற எண்ணிற்கு அனுப்பவும். இதற்கு பிறகு மின்னஞ்சலை பதிவு செய்த பிறகு நீங்கள் மீண்டும் இ-சிம் பெறுவதற்கான முயற்சியை மீண்டும் தொடரலாம்.

உங்களது மின்னஞ்சல் பதிவு செய்யப்பட்ட ஒன்றுதான் என்பது உறுதி செய்யப்பட்டவுடன் உங்களுக்கு 199 என்ற எண்ணில் இருந்து எஸ்.எம்.எஸ் ஒன்று அனுப்பப்படும். அந்த குறுஞ்செய்திக்கு நீங்கள் இ-சிம் சேவை வேண்டுமென்ற கோரிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் ESIMY என்ற செய்தியை அனுப்பவும் உங்களுடைய உறுதிப்படுத்தும் எஸ்.எம்.எஸ்ஸை அடுத்து 199 என்ற எண்ணிலிருந்து மீண்டும் எஸ்.எம்.எஸ் ஒன்றை பெறுவீர்கள் அதில் தொலைபேசி அழைப்பின் மூலம் அச்சேவை கோரிக்கை வேண்டும் என்பதை நீங்கள் உறுதிப்படுத்த கேட்டுகொள்ளப்படுவீர்கள்.

குரல் அழைப்பில் உங்கள் சம்மதத்தை வழங்கிய பிறகு உங்களது பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடிக்கு QR குறியீட்டைக் கொண்ட மின்னஞ்சல் அனுப்பப்படும்.

QR குறியீட்டை ஸ்கேன் செய்து இ-சிம்-ஐ செயல்படுத்த அதில் குறிப்பிட்டுள்ளபடி மேலும் தொடரவும். வி சேவைகளைப் புதிதாகப் பெறும் புதிய வாடிக்கையாளர்கள் வி வழங்கும் புதிய வி இ-சிம் இணைப்பைப் பெற சுய அடையாள ஆவணம் மற்றும் புகைப்படம் உள்ளிட்ட சான்றுகளுடன் அருகிலுள்ள வி ஸ்டோருக்கு செல்லவும்.

நீங்கள் தற்போது பயன்படுத்தும் மொபைல்ஃபோனை கூடவே எடுத்துச் செல்வது சேவைகளை உடனடியாக பெற உதவும். உங்களது மொபைல்ஃபோன் உங்கள் கையிலேயே இருப்பதால் இ-சிம் ஆக்டிவேஷன் செய்யப்படும்போது உருவாக்கப்படும் QR குறியீட்டை உடனடியாக ஸ்கேன் செய்யமுடியும்.

மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் QR குறியீடு ஒரு முறை மட்டுமே ஸ்கேன் செய்ய பயனுள்ளதாக இருக்கும் மேலும் இந்த குறியீட்டை ஸ்கேன் செய்யும் 2 மணி நேரத்திற்குள் இ-சிம் செயல்படுத்தப்படும்.