மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி

மாரி செல்வராஜ் இயக்கவுள்ள புதிய படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிப்பது உறுதியாகியுள்ளது. இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

சேப்பாக்கம் தொகுதியில் ஜெயித்தவுடன் தொடர்ச்சியாகத் தொகுதியில் பணிபுரிந்து வந்த உதயநிதி ஸ்டாலின். தற்போது கொரோனா அச்சுறுத்தல் குறைந்துவிட்டதால் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘ஆர்டிகிள் 15’ ரீமேக், ‘கண்ணை நம்பாதே’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.