இந்தியாவின் ஒலிம்பிக் வீரர்களுக்காக ஏ.ஆர் ரகுமானின் ‘ஹிந்துஸ்தானி வே’ பாடல்

2020-ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்த ஆண்டு, ஜூலை 23-ம் தேதி தொடங்க இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்தியாவில் உள்ள 126 வீரர் வீராங்கனைகள் டோக்கியோவுக்கு செல்ல இருக்கின்றனர். இந்நிலையில், ஒலிம்பிக்கில் பங்கேற்க இருக்கும் வீரர் வீராங்கனைகளுக்கு நாடெங்கிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது. அந்த வரிசையில். பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் மற்றும் பாடகி அனன்யா பிர்லா ஆகியோர் இணைந்து ‘ஹிந்துஸ்தானி வே’ என்ற பாடலை இயற்றியுள்ளனர்.

ஒலிம்பிக் செல்லும் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடலின் டீசர் கடந்த ஜூலை 9-ம் தேதி வெளியானது. அதை தொடர்ந்து, முழு பாடல் இன்று மதியம் 3.45 மணிக்கு வெளியானது. ஒலிம்பிக் செல்ல இருக்கும் இந்திய அணிக்கான அதிகாரப்பூர்வ ‘Team India Cheer Song’ ஆக இந்த பாடலை இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.

இதே போல, ஏற்கனவே இந்திய அணிக்கான அதிகாரப்பூர்வ ஒலிம்பிக் பாடல் கடந்த வாரம் வெளியானது. ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்திய அணியைச் வீரர் வீராங்கனைகள் பதக்கங்களை வென்று வர அனைவரும் உற்சாகம் அளித்து வருகின்றனர்.